`சுட்டு தள்ளு ` என கோஷம் எழுப்பியவர்கள் கைது - மேற்கு வங்க முதல்வர் அதிரடி

இவர்கள் அமித் ஷா நடத்திய பேரணியில் கலந்து கொள்ள சென்ற போது இவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளனர்.


இதனை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால் இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதி என பாஜக கட்சியினர் கூறியுள்ளனர்.


மகாநகர் நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் ஞாயிற்று கிழமை இரவு சிலர் மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என போலீஸார் கூறியுள்ளனர்.


இணை காவல் ஆணையர்( குற்றப்பிரிவு) முரளிதர் ஷர்மா கூறுகையில், ”நேற்று இரவு சிசிடிவி காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தது. இதன் அடிப்படையில் சுரேந்திர குமார் திவாரி, பங்கஜ் பிரசாத் மற்றும் துவ்ர பசு ஆகியோர் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திங்கள் கிழமை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படுவர்” என்றார்.