கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனாவால் எந்த ஒரு தொழில் நிறுவனமும், பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை அரசு வழங்கும்.
தற்போது கொரோனாவால் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்ப்டடுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். நீங்கள் சிறு அளவிலான தொழில் நடத்தி வந்தால் உங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ஊதிய மானியத்தை அரசு வழங்கும். இதன் மூலமாக உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் தகுந்த ஊதியத்தை வழங்க முடியும். இதனால் யாரும் வேலையை இழந்து விடக்கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் தொழிலில் பாதிப்பு அடைந்தால் உதவி செய்ய, கனடா ஏற்றுமதி நிதியகத்தை தொடர்பு கொள்ளலாம். அதன்மூலம் தேவையான உதவகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை